பொருட்பால் (Porul)Chapter 54: பொச்சாவாமை

    திருக்குறள் 532

    Thirukkural Verse 532 — Not Forgetting

    Thiruvalluvar

    பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.


    English Meaning

    Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

    சாலமன் பாப்பையா

    நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

    கலைஞர்

    நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்