பொருட்பால் (Porul)Chapter 54: பொச்சாவாமை

    திருக்குறள் 533

    Thirukkural Verse 533 — Not Forgetting

    Thiruvalluvar

    பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு.


    English Meaning

    Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.

    சாலமன் பாப்பையா

    மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.

    கலைஞர்

    மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்