பொருட்பால் (Porul)Chapter 55: செங்கோன்மை

    திருக்குறள் 543

    Thirukkural Verse 543 — Righteous Government

    Thiruvalluvar

    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்.


    English Meaning

    The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

    சாலமன் பாப்பையா

    அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.

    கலைஞர்

    ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்