பொருட்பால் (Porul)Chapter 55: செங்கோன்மை

    திருக்குறள் 544

    Thirukkural Verse 544 — Righteous Government

    Thiruvalluvar

    குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.


    English Meaning

    The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

    சாலமன் பாப்பையா

    குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

    கலைஞர்

    குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்