பொருட்பால் (Porul)Chapter 55: செங்கோன்மை

    திருக்குறள் 545

    Thirukkural Verse 545 — Righteous Government

    Thiruvalluvar

    இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு.


    English Meaning

    Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

    சாலமன் பாப்பையா

    அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.

    கலைஞர்

    நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்