பொருட்பால் (Porul)Chapter 55: செங்கோன்மை

    திருக்குறள் 546

    Thirukkural Verse 546 — Righteous Government

    Thiruvalluvar

    வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்.


    English Meaning

    It is not the javelin that gives victory, but the king’s sceptre, if it do no injustice.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

    சாலமன் பாப்பையா

    ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.

    கலைஞர்

    ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்