பொருட்பால் (Porul)Chapter 55: செங்கோன்மை

    திருக்குறள் 547

    Thirukkural Verse 547 — Righteous Government

    Thiruvalluvar

    இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்.


    English Meaning

    The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

    சாலமன் பாப்பையா

    ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.

    கலைஞர்

    நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்