பொருட்பால் (Porul)Chapter 55: செங்கோன்மை

    திருக்குறள் 549

    Thirukkural Verse 549 — Righteous Government

    Thiruvalluvar

    குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில்.


    English Meaning

    In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

    சாலமன் பாப்பையா

    அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.

    கலைஞர்

    குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்