பொருட்பால் (Porul)Chapter 55: செங்கோன்மை

    திருக்குறள் 550

    Thirukkural Verse 550 — Righteous Government

    Thiruvalluvar

    கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்.


    English Meaning

    For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

    சாலமன் பாப்பையா

    கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.

    கலைஞர்

    கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்