பொருட்பால் (Porul)Chapter 56: கொடுங்கோன்மை

    திருக்குறள் 553

    Thirukkural Verse 553 — Tyranny

    Thiruvalluvar

    நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.


    English Meaning

    The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

    சாலமன் பாப்பையா

    நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.

    கலைஞர்

    ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்