பொருட்பால் (Porul)Chapter 56: கொடுங்கோன்மை
திருக்குறள் 554
Thirukkural Verse 554 — Tyranny
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.
English Meaning
The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.
சாலமன் பாப்பையா
மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.
கலைஞர்
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்