பொருட்பால் (Porul)Chapter 56: கொடுங்கோன்மை

    திருக்குறள் 555

    Thirukkural Verse 555 — Tyranny

    Thiruvalluvar

    அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை


    English Meaning

    Will not the tears, shed by a people who cannot endure the oppression which they sufer (from their king), become a saw to waste away his wealth ?

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.

    சாலமன் பாப்பையா

    தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.

    கலைஞர்

    கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்