பொருட்பால் (Porul)Chapter 56: கொடுங்கோன்மை

    திருக்குறள் 556

    Thirukkural Verse 556 — Tyranny

    Thiruvalluvar

    மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி.


    English Meaning

    Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

    சாலமன் பாப்பையா

    ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

    கலைஞர்

    நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்