பொருட்பால் (Porul)Chapter 56: கொடுங்கோன்மை

    திருக்குறள் 558

    Thirukkural Verse 558 — Tyranny

    Thiruvalluvar

    இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.


    English Meaning

    Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

    சாலமன் பாப்பையா

    தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.

    கலைஞர்

    வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது