பொருட்பால் (Porul)Chapter 56: கொடுங்கோன்மை

    திருக்குறள் 559

    Thirukkural Verse 559 — Tyranny

    Thiruvalluvar

    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.


    English Meaning

    If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

    சாலமன் பாப்பையா

    ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

    கலைஞர்

    முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது