பொருட்பால் (Porul)Chapter 57: வெருவந்த செய்யாமை

    திருக்குறள் 566

    Thirukkural Verse 566 — Not Being Cruel

    Thiruvalluvar

    கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்.


    English Meaning

    The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

    சாலமன் பாப்பையா

    சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.

    கலைஞர்

    கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்