பொருட்பால் (Porul)Chapter 57: வெருவந்த செய்யாமை
திருக்குறள் 567
Thirukkural Verse 567 — Not Being Cruel
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்.
English Meaning
Severe words and excessive punishments will be a file to waste away a king’s power for destroying (his enemies).
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.
சாலமன் பாப்பையா
கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.
கலைஞர்
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்