பொருட்பால் (Porul)Chapter 57: வெருவந்த செய்யாமை
திருக்குறள் 568
Thirukkural Verse 568 — Not Being Cruel
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு.
English Meaning
The prosperity of that king will waste away, who without reflecting (on his afairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.
சாலமன் பாப்பையா
தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.
கலைஞர்
கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்