பொருட்பால் (Porul)Chapter 58: கண்ணோட்டம்

    திருக்குறள் 572

    Thirukkural Verse 572 — Benevolence

    Thiruvalluvar

    கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை.


    English Meaning

    The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

    சாலமன் பாப்பையா

    மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.

    கலைஞர்

    அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்