பொருட்பால் (Porul)Chapter 58: கண்ணோட்டம்

    திருக்குறள் 573

    Thirukkural Verse 573 — Benevolence

    Thiruvalluvar

    பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.


    English Meaning

    Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

    சாலமன் பாப்பையா

    பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?

    கலைஞர்

    இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்