பொருட்பால் (Porul)Chapter 58: கண்ணோட்டம்
திருக்குறள் 578
Thirukkural Verse 578 — Benevolence
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு.
English Meaning
The world is theirs (kings) who are able to show kindness, without injury to their afairs, (administration of justice).
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.
சாலமன் பாப்பையா
தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.
கலைஞர்
கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்