பொருட்பால் (Porul)Chapter 58: கண்ணோட்டம்
திருக்குறள் 579
Thirukkural Verse 579 — Benevolence
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை.
English Meaning
Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.
சாலமன் பாப்பையா
தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.
கலைஞர்
அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்