பொருட்பால் (Porul)Chapter 61: மடி இன்மை

    திருக்குறள் 606

    Thirukkural Verse 606 — மடி இன்மை

    Thiruvalluvar

    படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.


    English Meaning

    It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

    சாலமன் பாப்பையா

    நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.

    கலைஞர்

    தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்