பொருட்பால் (Porul)Chapter 61: மடி இன்மை

    திருக்குறள் 607

    Thirukkural Verse 607 — மடி இன்மை

    Thiruvalluvar

    இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர்.


    English Meaning

    Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.

    சாலமன் பாப்பையா

    சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.

    கலைஞர்

    முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்