பொருட்பால் (Porul)Chapter 61: மடி இன்மை

    திருக்குறள் 608

    Thirukkural Verse 608 — மடி இன்மை

    Thiruvalluvar

    மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.


    English Meaning

    If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

    சாலமன் பாப்பையா

    குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

    கலைஞர்

    பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்