பொருட்பால் (Porul)Chapter 61: மடி இன்மை

    திருக்குறள் 609

    Thirukkural Verse 609 — மடி இன்மை

    Thiruvalluvar

    குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.


    English Meaning

    When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

    சாலமன் பாப்பையா

    ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

    கலைஞர்

    தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்