அறத்துப்பால் (Aram)Chapter 7: மக்கட்பேறு
திருக்குறள் 64
Thirukkural Verse 64 — The Wealth of Children
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.
English Meaning
The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா
தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.
கலைஞர்
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது