பொருட்பால் (Porul)Chapter 66: வினைத்தூய்மை
திருக்குறள் 656
Thirukkural Verse 656 — Purity of Action
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க சான்றோர் பழிக்கும் வினை.
English Meaning
Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt).
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.
சாலமன் பாப்பையா
தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.
கலைஞர்
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது