பொருட்பால் (Porul)Chapter 66: வினைத்தூய்மை

    திருக்குறள் 657

    Thirukkural Verse 657 — Purity of Action

    Thiruvalluvar

    பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை.


    English Meaning

    Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

    சாலமன் பாப்பையா

    பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.

    கலைஞர்

    பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்