அறத்துப்பால் (Aram)Chapter 7: மக்கட்பேறு
திருக்குறள் 66
Thirukkural Verse 66 — The Wealth of Children
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.
English Meaning
“The pipe is sweet, the lute is sweet,” say those who have not heard the prattle of their own children.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
கலைஞர்
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்