பொருட்பால் (Porul)Chapter 68: வினைசெயல்வகை

    திருக்குறள் 677

    Thirukkural Verse 677 — வினைசெயல்வகை

    Thiruvalluvar

    செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.


    English Meaning

    The way to accomplish any task is to ascertain The inmost thoughts of an expert in that task.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்

    சாலமன் பாப்பையா

    ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.

    கலைஞர்

    ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்