பொருட்பால் (Porul)Chapter 68: வினைசெயல்வகை

    திருக்குறள் 678

    Thirukkural Verse 678 — வினைசெயல்வகை

    Thiruvalluvar

    வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.


    English Meaning

    Just as one elephant may be used to tether another, So one task may be the means of accomplishing another.

    Share this result

    Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

    சாலமன் பாப்பையா

    ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.

    கலைஞர்

    ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்