பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 721

    Thirukkural Verse 721 — அவை அஞ்சாமை

    Thiruvalluvar

    வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.


    English Meaning

    The pure who know the class ification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

    சாலமன் பாப்பையா

    சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.

    கலைஞர்

    சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்