பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 722
Thirukkural Verse 722 — அவை அஞ்சாமை
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்.
English Meaning
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.
சாலமன் பாப்பையா
தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.
கலைஞர்
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்