பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 778
Thirukkural Verse 778 — படைச் செருக்கு
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்.
English Meaning
The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.
சாலமன் பாப்பையா
போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.
கலைஞர்
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்