பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 779

    Thirukkural Verse 779 — படைச் செருக்கு

    Thiruvalluvar

    இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்.


    English Meaning

    Who would reproach with failure those who seal their oath with their death ?

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

    சாலமன் பாப்பையா

    தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?

    கலைஞர்

    சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது