அறத்துப்பால் (Aram)Chapter 8: அன்புடைமை
திருக்குறள் 78
Thirukkural Verse 78 — The Possession of Love
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.
English Meaning
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
கலைஞர்
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது