பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 837

    Thirukkural Verse 837 — Folly

    Thiruvalluvar

    ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை.


    English Meaning

    If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

    சாலமன் பாப்பையா

    அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.

    கலைஞர்

    அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது