பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 838
Thirukkural Verse 838 — Folly
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின்.
English Meaning
A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா
அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.
கலைஞர்
நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்