பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 839
Thirukkural Verse 839 — Folly
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்.
English Meaning
The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.
சாலமன் பாப்பையா
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!
கலைஞர்
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை