பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 904
Thirukkural Verse 904 — பெண்வழிச் சேரல்
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று.
English Meaning
The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
சாலமன் பாப்பையா
தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.
கலைஞர்
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை