பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 905

    Thirukkural Verse 905 — பெண்வழிச் சேரல்

    Thiruvalluvar

    இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல்.


    English Meaning

    He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

    சாலமன் பாப்பையா

    தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

    கலைஞர்

    எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்