அறத்துப்பால் (Aram)Chapter 10: இனியவை கூறல்

    திருக்குறள் 94

    Thirukkural Verse 94 — The Utterance of Pleasant Words

    Thiruvalluvar

    துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.


    English Meaning

    Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

    சாலமன் பாப்பையா

    எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

    கலைஞர்

    இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை