அறத்துப்பால் (Aram)Chapter 10: இனியவை கூறல்

    திருக்குறள் 93

    Thirukkural Verse 93 — The Utterance of Pleasant Words

    Thiruvalluvar

    முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்.


    English Meaning

    Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

    சாலமன் பாப்பையா

    பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

    கலைஞர்

    முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்