அறத்துப்பால் (Aram)Chapter 10: இனியவை கூறல்
திருக்குறள் 92
Thirukkural Verse 92 — The Utterance of Pleasant Words
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.
English Meaning
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
சாலமன் பாப்பையா
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது
கலைஞர்
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்