அறத்துப்பால் (Aram)Chapter 10: இனியவை கூறல்
திருக்குறள் 91
Thirukkural Verse 91 — The Utterance of Pleasant Words
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
English Meaning
Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
சாலமன் பாப்பையா
அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
கலைஞர்
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்